Published : 22 Nov 2017 09:19 PM
Last Updated : 22 Nov 2017 09:19 PM

சொகுசு காரில் பாலியல் தொழில்: இரண்டு பேர் கைது, பெண் மீட்பு

நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வருகின்றனர் சில நபர்கள்.

இதற்கு இணங்கும் பெண்களை அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது.

மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பாலியல் தொழில்  தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரகசியமாக கண்காணித்து பாலியல் தொழில் தரகர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பாலியல் தொழில்  தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று வளசரவாக்கம், பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, மெகாமார்ட் அருகே சொகுசு காரில் பாலியல் தொழில் நடத்திய சிலரைப் பிடித்தனர்.

சொகுசு காரில் பாலியல் தொழில் நடத்திய ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த நரேஷ்(23) பீமாவரம் பகுதியை சேர்ந்த ரவி(32) ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி காரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அவர்களிடமிருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹுண்டாய் வெர்னா சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x