Published : 10 Nov 2017 09:16 AM
Last Updated : 10 Nov 2017 09:16 AM
யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பில் சென்னை இடம் பெற்றுள்ளதற்கு சென்னை வாழ் மக்கள், இசைக் கலைஞர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிக உயர்ந்த இசை பாரம்பரியம் கொண்ட சென்னை தற்போது யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பில் இணைந்துள்ளது சென்னை வாழ் மக்களுக்கு பெருமைக்குரிய தருணம். சென்னை நமது உயர்ந்த கலாசாரம், பாரம்பரியம், கர்னாடக இசை, தொன்மையான நடனம், நாடகம் மற்றும் கலையை வளர்ப்பதுடன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது.
தமிழக ஆளுநராக சென்னையில் வசித்து வரும் நான், அனைத்து கலைஞர்களுக்கும், சபாக்களுக்கும், கலை வல்லுநர்கள், ரசிகர்கள் மற்றும் சென்னை மக்களுக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT