Published : 28 Nov 2017 10:50 AM
Last Updated : 28 Nov 2017 10:50 AM
ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் ஒப்பந்த செவிலியர்கள் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அப்படித்தான் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை இந்த அரசு நிச்சயமாக பரிசீலனை செய்யும்.
போராட்டத்தை கைவிடவேண்டும்
இன்னும் ஒரு மாதத்தில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டதில் மீதமுள்ள 200 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அதன்பின் இந்த ஒப்பந்த செவிலியர்களும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஒப்பந்த செவிலியர்களும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT