Published : 06 Nov 2017 12:49 PM
Last Updated : 06 Nov 2017 12:49 PM

தினத்தந்தியின் 75 ஆண்டு கால சாதனை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

75 ஆண்டுகாலம் தினத்தந்தி நாளிதழ் மிகப்பெரிய சாதனைகளை புரிந்துள்ளது என சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘75 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிய தினத்தந்தி நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பத்திரிகை துறையில் தினந்தந்தி முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வழங்குவது தினத்தந்தியின் சிறப்பு அம்சம். அஞ்சல் துறையின் தந்தி மக்கள் பழக்கத்தில் குறைந்துவிட்டது. ஆனால் 75 ஆண்டுகளையும் கடந்து தினத்தந்தி மக்களுக்கு தந்தியாக செய்திகளை வழங்கி வருகிறது. தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என தினத்தந்தி 17 பதிப்புகளில் வெளிவருவது சாதனை. தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x