Published : 15 Nov 2017 10:36 AM
Last Updated : 15 Nov 2017 10:36 AM
புதுச்சேரியில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் வீரர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு நிகரான ஊதியம், 8 மணி நேர வேலை, துறைக்கு இயக்குனர் பணி அமர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி புதுச்சேரியில் உள்ள 10 தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த போராட்டத்தால் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என தீயணைப்பு வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT