Published : 22 Nov 2017 10:02 AM
Last Updated : 22 Nov 2017 10:02 AM

திரைத்துறை துயரங்கள் களையப்பட வேண்டும்: அசோக்குமார் தற்கொலைக்கு தமிழிசை வருத்தம்

நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலைக்கு வருத்தம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் செய்துள்ளார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கடிதம்எழுதி வைத்திருந்தார்.

"சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி" என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார்.

அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைத்துறை அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை வருத்தம் அளிக்கிறது. திரைத்துறையின் துயரங்கள் களையப்பட வேண்டும். தீர்வுகள் காண முயற்சிப்போம்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x