Published : 22 Jul 2014 12:13 PM
Last Updated : 22 Jul 2014 12:13 PM

சென்னை அருகே செவிலியர் கொடூர கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்துள்ள நெய்வேலி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் சாமுண்டீஸ்வரி(22). இவர், திருவள்ளூர் அருகே மணவாள நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை பகலில் வீட்டில் இருந்த அவர் அருகில் இருந்த புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை 4 மணி வரை சாமுண்டீஸ்வரி வீடு திரும்பாததால், அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது புதர் பகுதியில், சாமுண்டீஸ்வரி, மர்ம நபர்களால், கற்களால் தலை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பென்னலூர்பேட்டை போலீஸார், சாமுண்டீஸ் வரியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x