Published : 04 Jul 2023 07:33 AM
Last Updated : 04 Jul 2023 07:33 AM

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14 அன்று கைது செய்தனர்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுபடி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் தனது கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x