குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை சரிபார்த்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை சரிபார்த்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
Updated on
2 min read

சென்னை: குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை சரிபார்த்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபிஉள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துதாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, புலன்விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிரமான குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகடிஜிபி தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் குறிப்பிட்ட 11 தாலுகாக்களில் மட்டும் தற்போது சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்றதாலுகாக்களிலும் இந்த பிரிவுகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்களுக்கான விதிகளை வகுக்கும் நடைமுறைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை சரிபார்த்து, உரிய காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சமீபத்தில் அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நடந்த அரசு வழக்கறிஞர்கள் கூட்டத்திலும் அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர்களின் கருத்தைப் பெற வேண்டியதில்லை என டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தீவிரகுற்ற வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு பிரிவை தொடங்குவதற்கான காவல் நிலையங்களை அடையாளம் காண வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது என்பது முக்கியமானது என்பதால் அதில் அவசரம் காட்ட வேண்டாம் எனக் கூறி 4 வாரங்கள் அவகாசம் வழங்கினர்.

மேலும், தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையில் உள்ளகுறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அவற்றை உரிய காலத்துக்கு முன்பாக, ‘‘அரசு வழக்கறிஞர்களுக்கு அனுப்பும் வகையில் டிஜிபி சுற்றறிக்கை வெளியிட வேண்டும். இந்த இறுதி அறிக்கைகளை விரைவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டும் என அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அரசு குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநரும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இதில் துரிதநடவடிக்கை எடுத்த டிஜிபிக்கும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டஅமர்வு நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழக அரசின் தலைமைச் செயலர், அதற்கு உறுதுணை புரி்ந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் பாராட்டு’’ என தெரிவித்து, விசாரணையை ஜூலை 21-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in