பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: 'ஆதனின் பொம்மை' நாவலுக்காக பாலசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதய சங்கருக்கும், 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புரஸ்கார் வென்றுள்ள ராம் தங்கத்துக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள ராம் தங்கத்துக்கும் தமிழக முதல்வர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in