Published : 25 Oct 2017 10:19 AM
Last Updated : 25 Oct 2017 10:19 AM

வருவாய் தேடிக்கொள்ளவே ஆட்சி நடத்துகின்றனர்: விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் குற்றச்சாட்டு

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்தும், விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று காலை தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேசியது:

தமிழகம் தற்போது லஞ்சம், ஊழலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து டெங்கு காய்ச்சலில் முதலிடத்தில் இருக்கிறது. கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் 3 பேர் இறந்துள்ளனர். கந்து வட்டிக்காரர்களிடம் போலீஸார் பணம் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இது வெட்கமாக இல்லையா?

இதே முடிவு கரும்பு விவசாயிகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று விரைவில் அறிவிப்பேன்.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியை தொடரவும், வருமானம் தேடிக்கொள்ளவும் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர். சிவாஜி, கமலை விட இருவரும் பிரமாதமாக நடிக்கிறார்கள் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x