Published : 06 Oct 2017 08:58 AM
Last Updated : 06 Oct 2017 08:58 AM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தனிநபர்களின் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள், உபயோகமற்ற, பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் உருவாவதற்கு மூலகாரணமாக அமைகிறது. அதைத் தடுத்திடும் நோக்கில், உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறினால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT