Published : 24 Oct 2017 11:53 AM
Last Updated : 24 Oct 2017 11:53 AM

கரூரில் பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

கரூரில் பாஜக செயற்குழு அரங்கத்தின் அருகே பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

கரூர் பாஜக செயற்குழுக் கூட்டத்துக்கு பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வருகையை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே  மோதல் ஏற்பட்டது.

இதில் போலீஸார் வாகனங்களும் உடைக்கப்பட்டன. மோதலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், ‘விஜய்யை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார்’ என்றார்.

திருமாவளவன் குறித்த தமிழிசை சவுந்தரராஜனின் இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை திஙகட்கிழமை  அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில்  தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x