Published : 30 Oct 2017 01:11 PM
Last Updated : 30 Oct 2017 01:11 PM

கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்திவைத்தார் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை இன்று (திங்கள்கிழமை) நடத்திவைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன் - தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.

திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

உடல்நலக்குறைவால் கருணாநிதி கடந்த ஓராண்டாக ஓய்வு எடுத்து வருகிறார். பொதுநிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகத்துக்குச் சென்றார். அதன்பின்னர் தற்போது கொள்ளுபேரன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். கருணாநிதி பொதுவெளியில் அடிக்கடி தோன்றுவது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x