Published : 03 Oct 2017 10:17 AM
Last Updated : 03 Oct 2017 10:17 AM

காதி கிராமோத்யோக் பவனில் தீபாவளி கதர் ஆடை விற்பனை: ஆளுநர் தொடங்கிவைத்தார்

சென்னையில் காதி கிராமோத்யோக் பவனில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் விற்பனையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் 149-வது காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற ஆளுநர் (பொறுப்பு)சி.எச்.வித்யாசாகர் ராவ், காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் ஆடை சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார். முதல் விற்பனையை ஆளுநர் தொடங்கிவைக்க, அதனை ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லெட்சுமணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கதர் ஆணையத்தின் தென்மண்டல உறுப்பினர் ஜி.சந்திர மவுலி, காதி கிராமோத்யோக் பவன் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் ராஜேஸ்வரி, மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் விற்பனைக்காக காதி கிராமோத்யோக் பவனில் கதர் பருத்தி, கம்பளி, பாலிவஸ்திரா, கதர் பட்டு, ஆயத்த ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்புத் தள்ளுபடி

தமிழ்நாடு கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் வரையும், வெளிமாநில ரகங்களுக்கு 20 சதவீதம் வரையும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையையொட்டி காதி கிராமோத்யோக் பவன் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந் திருக்கும்.

அண்ணா சாலையில் (பிஆர் & சன்ஸ் அருகில்) அமைந்துள்ள காதி கிராமோத்யோக் பவனுக்கு கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையிலும், அடையாறு இந்திரா நகர் எல்.பி.சாலையிலும் கிளைகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x