அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை உடனே வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை உடனே வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:கோடை வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் பாடப் புத்தகங்கள் கூட மாணவர்களுக்கு முறையாகத் தரப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.

பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர உபகரணங்களை மாணவ, மாணவியருக்கு உடனுக்குடன் அளிக்காதது அவர்களுடைய படிப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தை குறைக்கும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்க செய்வதையும், அவர்களுக்குத் தேவையான இலவச பொருட்கள் உடனுக்குடன் சென்றடைவதையும் முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in