கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 15-ல் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டி டியூட் வளாகத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வராததால், இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ``இந்த மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.146 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவமனையைத் திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்கப்பட்டது. அவரும் வருவதாகத் தெரிவித்தார்.

ஆனால், இப்போது எந்த பதிலும் இல்லை. தயார் நிலையில் உள்ள மருத்துவமனையை நீண்டநாட்களாகத் திறக்காமல் இருப்பது சரியாக இருக்காது. அதனால், வரும் 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையைத் திறந்து வைக்க இருக்கிறார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in