Published : 10 Oct 2017 05:37 AM
Last Updated : 10 Oct 2017 05:37 AM

வல்லூர் அனல் மின் நிலைய கொதிகலனில் பழுது: 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்படுகிறது. தமிழ்நாடு மின்வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து அமைத்துள்ள இந்த அனல் மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் என, 3 அலகுகளில் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3- வது அலகில் உள்ள நீரை குளிரூட்டும் பகுதி, கடந்த ஜூன் 4-ல் திடீரென தீப்பற்றி, அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் அலகில் கொதிகலன் குழாய் பகுதியில் பழுது ஏற்பட்டது. இதனால், அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மட்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓரிரு நாட்களில் பழுது நீக்கி மின் உற்பத்தி தொடங்கும் என, அனல்மின் நிலைய அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x