Published : 27 Oct 2017 05:57 PM
Last Updated : 27 Oct 2017 05:57 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் அனேக இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையிலும் மிதமான மழை இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 80 மி.மீ. மழையும் சித்தம்பட்டி, பெருந்துறையில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT