Published : 31 Oct 2017 06:11 PM
Last Updated : 31 Oct 2017 06:11 PM
சோகா இகேடா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தடகளப் போட்டிகளில் 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஏ.எல்.முதலியார் தடகள போட்டிகளின் வெள்ளிவிழா நினைவுக் கொண்டாட்டம் அக்டோபர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சோகா இகேடா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 6 தங்கப் பதக்கங்களையும், 6 வெள்ளிப் பதக்கங்களையும், 8 வெண்கலப் பதக்கங்களையும் வென்று ஒட்டுமொத்த போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். கல்லூரி தலைவர் டாக்டர் சேது குமணனும், செயலாளர் கோகிலம் குமணனும் போட்டியில் பங்கேற்ற மாணவிகளைப் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT