சென்னை | பைக் மீது கார் மோதியதில் பொறியாளர் உயிரிழப்பு

சென்னை | பைக் மீது கார் மோதியதில் பொறியாளர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மதுராவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் சரண்ராஜ்(29). நேற்று முன்தினம் தனது பைக்கில் கே.கே.நகர் ஆற்காடு சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது அவருக்குப் பின்னால், அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது.

அதன் தொடர்ச்சியாக, அந்த கார் சரண்ராஜ் மீதும் மோதியது.இதில் பலத்த காயமடைந்த சரண்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், சரண்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சாலிகிராமம் எம்சி அவென்யூவை சேர்ந்த பழனியப்பன்(41) என்பதும், இவர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் பழனியப்பனை போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியப்பன், ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in