Published : 05 Oct 2017 09:30 AM
Last Updated : 05 Oct 2017 09:30 AM
நாமக்கல் கீரம்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்தனர்.
மதுரை தபால் தந்தி தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ரவீந்திரன்(62). அவர் தனது மனைவி மலர்கொடி(60), மகள் பாக்யஸ்ரீ(25), பேத்தி மைத்திரேயி(2) ஆகியோருடன் காரில் பெங்களூரு சென்றுள்ளார். மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த உறவினர் அழகுமணிவண்ணன்(45) என்பர் காரை ஓட்டினார்.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதிமற்றொரு புறம் எதிரே சென்ற லாரி மீது மோதியது.
இதில் ரவீந்திரன், பாக்யஸ்ரீ, அழகு மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மலர்கொடி, மைத்ரேயி ஆகியோர் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT