Published : 23 Oct 2017 01:30 PM
Last Updated : 23 Oct 2017 01:30 PM

மதுரையில் அமைதியாக நடந்து முடிந்த ஆர்எஸ்எஸ் பேரணி

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) சார்பில் முதன்முதலாக மதுரையில் நடைபெற்ற விஜயதசமி பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

ஆர்எஸ்எஸ்ஸின் 93-வது நிறுவன நாளைக் கொண்டாடும் வகையில் பேரணி நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் பாஜக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத்தின் சார்பாக சுமார் 6 பேர் மதுரை பைபாஸ் சாலையில் பேரணியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டினர். எனினும் பேரணி தொடங்கப்படுவதற்கு முன்னால் போலீஸார் அவர்களைக் கைது செய்து காவலில் வைத்தனர். இதைத் தொடர்ந்து அமைதியாக பேரணி நடைபெற்றது.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்ஸைத் தலைமையேற்று நடத்தும் ஆர்.வன்னியராஜன், ''தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் முழுமையாக வேர் பரப்பியுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x