Published : 08 Jun 2023 04:10 AM
Last Updated : 08 Jun 2023 04:10 AM

மதுரை - திருமோகூர் திருவிழா தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிதியுதவி

மதுரை: ஒத்தக்கடை திருமோகூர் திரு விழாவையொட்டி நடந்த தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தீருதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.14,800 மற்றும் 34 இருசக்கர வாகனங்கள், ஒரு வாகனம் சேதம் அடைந்ததற்கு ரூ.3,18,200, பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.2.50 லட்சம் என மொத்தம் 47 பேருக்கு ரூ. 5,83,000 காசோலையை ஒத்தக் கடை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆட்சியர் சங்கீதா வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x