Published : 26 Oct 2017 10:30 AM
Last Updated : 26 Oct 2017 10:30 AM
தமிழகத்தில் முதல் முறையாக 108 மற்றும் 104 சேவை மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 மருத்துவ சேவையின் கட்டுப்பாட்டு அறை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 108 மற்றும் 104 சேவையின் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 200 மாணவ, மாணவிகளுக்கு 108 மற்றும் 104 சேவை மையத்தில் நேரடி செயல்முறை விளக்கம் அளித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
108 சேவை மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வந்த மாணவர்களுக்கு எப்படி அழைப்புகள் வருகின்றன, அழைப்புகள் எப்படி கையாளப்படுகிறது, தொழில்நுட்பங்கள் எப்படி செயல்படுகின்றன என்று விளக்கப்பட்டது. அதேபோல் 104 சேவை மையத்தில் வரும் அழைப்புகளுக்கு டாக்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர், மனநல ஆலோசனைகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இறுதியாக பொதுசுகாதாரத் துறை யைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணி, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப் புணர்வை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT