Published : 22 Oct 2017 07:37 PM
Last Updated : 22 Oct 2017 07:37 PM

ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது: நயினார் நாகேந்திரன்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் அறிவித்திருப்பதால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றுமுன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் அறிவித்திருப்பதால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏற்கெனவே அவர், கருப்புக் கண்ணாடி, ஜீன்ஸ் பேன்ட், கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு நமக்கு நாமே பயணம் சென்றார். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. கருப்புக் கண்ணாடி போட்டவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x