Published : 28 Oct 2017 11:01 AM
Last Updated : 28 Oct 2017 11:01 AM
திமுக தலைவர் கருணாநிதி வரும் நவம்பர் 1-ம் தேதி அவரது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்துகொள்கிறார். ஓராண்டுக்குப் பின்னர் கருணாநிதி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 19-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். அவரது வருகை திமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் வரும் நவம்பர் 1-ம் தேதி கொள்ளுப்பேரன் மனுரஞ்சித், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஓராண்டுக்குப் பின்னர் அவர் கலந்துகொள்ளவிருக்கும் முதல் திருமண நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 2016 டிச.1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 10 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT