5 போட்டித் தேர்வுகளின் முடிவுகளை ஒரே நாளில் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

5 போட்டித் தேர்வுகளின் முடிவுகளை ஒரே நாளில் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வு கடந்த 2022 டிச.26-ம் தேதியும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்.13-ம் தேதியும், கல்லூரி கல்வி இயக்கக நிதியாளர் (பர்சார்) தேர்வு கடந்த மார்ச் 10-ம் தேதியும், இளநிலை மறுவாழ்வு அலுவலர் தேர்வு ஏப்.1-ம் தேதியும் நடத்தப்பட்டன.

இந்த 5 போட்டித் தேர்வுகளின் முடிவுகளும் நேற்று ஒரே நாளில் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளின் அடுத்த நிலையான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், மதிப்பெண் மற்றும் தரவரிசை ஆகியவை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in