

பணம், பொருள் சம்பாதிப்பது மட்டுமா வாழ்க்கை? மனிதப் பிறவியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அதைத் தாண்டிச் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். ஒவ்வொரு நொடிப் பொழுதையும் அனுபவிக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். வாழும் போதும், வாழ்ந்த பிறகும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான தடயங்களை விட்டுச் செல்கின்றனர். அதனால்தான் மாபெரும் மனிதர்களை இன்றும் நினைவுகூர்கிறோம்.