

எங்கள் பகுதியில் பிளாட்ஃபாரத்தில் ஒருவர் காயலான் கடை நடத்திவருகிறார். மேலே தகரத்தால் கூரை. ஒரு பக்கம் சுவர். இரண்டு பக்கங்களிலும் தகரத்தால் அடைத்து, அந்தக் கடை கதவின்றி எப்போதும் திறந்தே இருக்கும்!
நாள்தோறும் காலையில் டிரை சைக்கிளுடன் வருவார். கொண்டுவந்த தராசை ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார். பழைய பேப்பர், பிளாஸ்டிக், இரும்புப் பொருள்களை வாங்கிச் சேகரிப்பார்.