

புதுக்கோட்டை கறம்பக்குடிக்கு அருகில் அம்புக்கோவில் என்றோர் ஊர் உள்ளது. இவ்வூரின் பெயரை மேலோட்டமாகப் பார்க்கும்போது அம்புடன் தொடர்புடைய ஊரோ என்று நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை.
சங்கத் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு இவ்வூரைப் பாடியுள்ளன. அழும்பில் எனும் ஊர்தான் அழும்பில்கோவில் என்றாகி, தற்போது அம்புக்கோவில் என்றாகியிருக்கிறது. மேலும் மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களும் இவ்வூரைப் பாடியுள்ளன.