

எமர்ஜென்சி அமலில் இருந்தபோது நான் பத்தாம் வகுப்பு மாணவன். எனக்கு அரசியல் தெரியாது. அப்போது ரயில்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எல்லாம் குறித்த நேரத்தில் சரியாக இயங்கியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
அடுத்து வந்த தேர்தலில் எங்கள் கிராமத்தில் இந்திராவைத் தாக்கி, ஓர் அரசியல் கட்சியால் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. மாத காலண்டரைப் பிய்த்து, பின்பக்கம் இந்திராவை வாழ்த்தி எழுதினேன். இரவோடு இரவாக என் தம்பியின் துணையுடன் அந்த போஸ்டர்கள் மீது ஒட்டிவிட்டேன்.