தெருக்கூத்து ஆதிகேசவன்

தெருக்கூத்து ஆதிகேசவன்
Updated on
1 min read

விருத்தாச்சலம் அருகில் உள்ள புலியூரைப் பிரபலமாக்கியவர் நாடக ஆசான் ஆதிகேசவன். விவசாயக் கூலிகளாக வயல் வேலையை மட்டுமே நம்பி இருந்த மக்கள், நாளடைவில் வாழ்வாதாரம் தேடி கட்டிடத் தொழிலாளர்களாகவும் கூலியாள்களாகவும் மாறிவிட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெருக் கூத்துக் கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஆதி கேசவன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். தெருக்கூத்துக் கலை மீதுகொண்ட பற்றுக்காக அந்த வேலையை விட்டுவிட்டார். ‘தெருக் கூத்து சக்கரவர்த்தி’ கோவி. சடகோபனிடம் 23 வயதில் மாணவ ராகச் சேர்ந்தார். இன்று 15 பேர் கொண்ட தெருக்கூத்துக் குழுவின் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in