அன்று ‘போர்’; இன்று ‘திரை’

அன்று ‘போர்’; இன்று ‘திரை’
Updated on
2 min read

வேளாண் தொழிலின் மீது மக்கள் அதீதப் பற்று கொண்டிருந்த போது கால்நடை வளர்ப்பும் அவர்களுக்கு முதன்மைத் தொழிலாக இருந்தது. வேளாண் நிலமற்றவர்கள்கூட கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தினர். அதனால் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், பிறவற்றை ஆண்டு முழுவதும் பயன் படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் அமைப்பிற்கு ‘வைக்கோல் போர்’ என்று பெயர்.

உருண்டை வடிவிலாகக் கற்களை வைத்து, அதன் மேல் நீளமான மரம் அல்லது தட்டையைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்து, அதன்மீது வைக்கோலைக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்புவர். இவ்வகையில் நெல், வரகு, திணை, சாமை, பயறு வகைப் பயிர்களின் தழை போன்ற பொருட்களைச் சேகரித்து வைத்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்துவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in