

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடிக்கு அருகில் ‘செவ்வாய் பட்டி’ என்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊரின் பெயரைக் கேட்கும் யாருக்கும் இது ஒரு கிழமையின் பெயரோ என்று தோன்றும். ஆனால், ஓர் ஊரின் பெயருக்கு அந்த ஊரின் அமைவிடம் மிக முக்கியமானது.
கரம்பக்குடியை ஒட்டி ஒரு நீண்ட ஏரி உள்ளது. எந்த ஓர் ஏரிக்கும் வாய்ப்பகுதியும் கால்ப்பகுதியும் உண்டு. அந்த ஏரி தொடங்குமிடத்தில், வாயின் கரையில் நன்கு விளையக்கூடிய நிலம் இருக்கிறது. அந்த நிலப்பகுதியில்தான் இந்த ஊர் உள்ளது.