

வீண் செலவு செய்பவர்களை, ‘காசைக் கரியாக்காதே’ என்பார்கள். ஆனால், இருளர்கள் கரியைக் காசாக்கு கிறார்கள். தரைமட்ட அளவுக்கு வெட்டப்பட்ட மரங்களில் இருந்து வேர்ப்பகுதியைத் தோண்டி எடுத்து, அதை ஒழுங்குபடுத்தி கரியாக்கி விற்பனை செய்கிறார்கள். சிறிய தேநீர் கடைகள், நகை செய்பவர்கள், சிறிய உணவகங்கள், பட்டறைகள் போன்றவற்றில் மரக்கரியைத் தான் இன்றும் பயன்படுத்துகிறார்கள்.
அதனால் மரக்கரிக்குத் தேவை இருக்கிறது. வேளாண் நிலங்களிலும் நிலத்தின் ஓரப்பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் மரங்களை விற்பனை செய்யும்போது, பெரும் பாலும் அதன் வேர்ப்பகுதியைத் தோண்டி எடுப்பதில்லை. அது போன்ற மரங்களின் வேர்ப்பகுதிகளை அப்புறப்படுத்தினால் போதும் என்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதிப்பார்கள்.