

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் ‘கரு வேப்பிலான் கேட்’ என்றோர் இடம் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வெளியேறும் அல்லது புதுக்கோட்டைக்குள் நுழையும் வாயில் இது. போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நடை பெறும் இடமும்கூட. வேலை வாய்ப்பு அலுவலகம், ஐடிஐ, நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், சிப்காட் எனப் பல முக்கிய அலுவலகங்களுக்கு இந்த கேட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
கடைகளின் பெயர்ப்பலகைகளில் இந்த இடம் ‘கருவேப்பிளான் கேட்’ என்றும் ‘கருவேப்பிலான் கேட்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. பெயர்க் காரணம் குறித்துப் பலரிடம் விசாரித்தபோது ஒருவர், ‘இந்த ரயில்வே கேட்டில் கருவேப்பிலான் என்கிற பெயரில் ஒருவர் இருந்தார்.