

சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் மைல் கற்கள் மூலம் அடுத்த ஊர் எது, எவ்வளவு கி.மீ. தொலைவில் இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியும். தூரத்தை அளவிடப்படும் மைல் என்கிற அளவு கைவிடப்பட்டு, கி.மீ. என்கிற அளவிலேயே கணக்கிடப்பட்டாலும் ‘மைல்கல்’ என்றே அழைக்கப்படுகிறது.
இன்று சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மைல்கற்களுக்கு ஒரு வரலாறு உண்டு. பிரிட்டன் தங்கள் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோது, ரோமானியர்கள் பல பெரிய கட்டுமானத் திட்டங்களைச் செய்ததால், ‘மைல்கல்’ என்கிற கருத்தை ரோமானியர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் பெற்றனர்.