

சைக்கிள் பழகுதல் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். சிலருக்கு அவர்களுடைய தந்தையோ அண்ணனோ கற்றுக் கொடுத்திருப்பார்கள். பெரும்பாலும் நண்பர்கள்தான் கற்றுக் கொடுப்பார்கள். 1960களில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதும் பழகுவதும் அரிது.
எனக்கு நண்பன் சுப்பிரமணியன் என்கிற பசுங்கிளிதான் பொறுமையாக அதிக நேரம் செலவழித்துக் கற்றுக் கொடுத்தான். முதல் குரு பெரிய கோபால். நான் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் சிரமப்பட்டேன். சிரமப்படுத்தினேன் என்பதே உண்மை. அவன், ‘போடா உனக்கு சைக்கிள் சீக்கிரம் வராது என் நேரத்தையெல்லாம் வீணடிக்கிறாய்’ என்று ஒதுங்கிக்கொண்டான்.