விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு! | பாற்கடல் 16

விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு! | பாற்கடல் 16
Updated on
3 min read

தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக 1967இல் அரசு சார்பாகப்பரிசுச் சீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. சற்றேறக்குறைய இதே காலக் கட்டத்தில் கேரள அரசு சார்பிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டது. அதுவே முன்னோடி. ஒரு லட்சம் முதல் பரிசு என்றதும் வாயைப் பிளக்காதவர்களே கிடையாது.

மில் அதிபர்கள், பஸ், தியேட்டர் முதலாளிகள்தான் லட்சத்தில் புழங்குவார்கள். திருநெல்வேலி யின் மிகப்பெரிய தியேட்டர் கட்டுவதற்கே அப்போது ஐந்து லட்சம்தான் ஆனது என்பார்கள். அதை அண்ணாந்து பார்த்தவர்கள் எல்லாரும், ‘சும்மாவா, அஞ்சு லட்சத்தை முழுங்கிட்டு நிக்கு தாம்லே” என்று வியந்தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in