வாழ்வு இனிது
‘தோழர்’ எனும் மேஜிக்! | பாற்கடல் - 8
அலகாபாத் (இப்போது பிரயாக் ராஜ்) சென்றிருந்தோம். அது ஆன்மிகப் பயணம். நேரப் பிரச்சினை காரணமாகத் திட்டமிட்டபடி ‘ஆனந்த பவன்’ பார்க்காமல் சென்று விட அமைப்பாளர்கள் முடிவெடுத்து, ஆறுதலுக்காக வழியில் இருந்த ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்.
நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஆனந்த பவனின் மூன்று தலைமுறையும் நினைவில் வந்து போனார்கள். அங்கே கால் பட்டாலும் போதும் என்று அமைப்பாளர்களிடம் நிர்ப்பந்தித்தேன். என்னைப் போலவே இன்னொருவரும் வாதிட்டார். பெரும்பாலானவர்கள் கோயிலுக்குப் போகலாம் என்றார்கள். நேரம் கடந்தது. டிரைவருக்கு எங்கள் வாக்குவாதம் எப்படிப் புரிந்ததோ இரண்டையும் பார்க்கலாம், நான் நேரத்தைச் சரிக்கட்டிக்கொள்கிறேன் என்றார்.
