

ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் அவசரமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “உனக்கு நேரம் இருந்தால் என்னுடன் வர முடியுமா?” என்று கேட்டார்.
நானும் எங்கே என்று கேட்காமல் அவருடன் சென்றேன். அது ஒரு முதியோர் இல்லம். நண்பர் அந்த இல்லத்தில் பெருக்குவது, துடைப்பது, படுக்கைகளை ஒழுங்குபடுத்துவது, குளியலறைகளைச் சுத்தம் செய்வது என வரிசையாக வேலைகளைச் செய்து முடித்தார். பிறகு முதியவர்களிடம் அமர்ந்து பேசினார்.