

திருச்சியில் உள்ள மேலூர் நடுக்கரை கிராமத்திலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குப் பயணித்தோம்.
வயல்கள், தோப்புகள், கிராமங்களைக் கடந்து அமைந்திருந்தது அந்தப் பிரம்மாண்டமான பூங்கா. நுழைந்ததும் செயற்கை நீரூற்றுக்கு மேலே மிகப் பெரிய நீல வண்ணத்துப் பூச்சியின் உருவம் நம்மை வரவேற்றது. இதுபோல் புழு, வண்ணத்துப் பூச்சி, தட்டான், எறும்பு, வெட்டுக்கிளி, வண்டுகள், பூக்கள் போன்ற உருவங்களை மிக நேர்த்தியாகப் பூங்காவின் உள்ளே ஆங்காங்கு செய்து வைத்திருக்கிறார்கள்.