

பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சொல்வார், “நீண்ட நாள் பாராமல் இருந்துவிட்டுப் பார்க்கையில் நம் சொந்த ஊரில், சொந்தத் தெருக்கள் அகலம் சுருங்கிச் சிறிதானது போலத் தோன்றும்” என்று. ஓரிரு வருடங்கள் வெளியூரில் பணிபுரிந்துவிட்டு, ஓர் இரவில் திடீர் வரவாகத் தெருவில் நுழைந்தேன்.
அமைதியான தெருவில் ஆள்களே இல்லை. ஒன்றிரண்டு நாய்கள் வேலை எதுவும் இல்லாமல் அங்கே போவதும் இங்கே வருவதுமாக கருமமே கண்ணாக ஓடவும் உட்காரவுமாக அலைந்து கொண்டிருந்தன. அம்மாதான் அடிக்கடி ஒரு சொலவடை சொல்வார், “நாய்க்கு வேலையுமில்லை, உட்கார நேரமுமில்லை” என்று. அது எவ்வளவு உண்மை.