

கோபுரத்தினுள் அதன் உச்சிக் குச் செல்ல படிக்கட்டுகள் இருக்கும். அவை ஒரு தளத்திற்குள் வருவது இடதுபுறம் இருந்தால், அடுத்த தளத்திற்கு ஏறுவது வலது புறம் இருக்கும். இதை நான் முதன் முதலில் என் ஆறு, ஏழு வயதில் ஏறிய சுசீந்திரம் கோயிலில்தான் பார்த்தேன்.
வயது தான் ஆறு. நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அப்போதே கொஞ்சம் அதிகப்பிரசங்கியான பையன் நான். அது, “மாமாவுக்கு அஞ்சாம் வாய்ப் பாடு சொல்லிக் காண்பி, ஒரு இங்லீஷ் போயம் சொல்லு, அதுதாண்டே டூ ஃபோர் சிக்ஸ் எய்ட் சொல்லிக் காண்பி” என்றதும்,