Published : 28 Mar 2024 06:00 AM
Last Updated : 28 Mar 2024 06:00 AM
என் கல்லறையின் மேல்
இரண்டு சொற்களை மட்டும் பொறியுங்கள்
‘ட்ஸ்வீ... ட்ஸ்வீ...’
இப்படித்தான் பட்டாணிக் குருவி கூப்பிடுகிறது. - ரோசா லக்சம்பர்க்
கம்யூனிஸ்டுகள் கலை இலக்கியத் துக்கு எதிரானவர்கள்; கலையும் இலக்கியமும் வர்க்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் மயக்க மருந்துகள் என்று ஒரு கருத்து இருந்தது. அதனாலேயே பாறைபோல் இறுகிய மனம் கொண்டவர்களாகவே கம்யூனிஸ்டுகளைச் சித்தரிப்பார்கள். பாறையின் இடுக்குகளிலிருந்து பசுந்தளிர் எட்டிப்பார்ப்பது போல் கம்யூனிஸ்டுகளின் மனங்களிலும் பசுந்தளிர்போல் கலை எட்டிப்பார்க்கிறது.
இதற்கு எண்ண முடியாத எடுத்துக் காட்டுகள் உள்ளன. உலகின் ஆகச்சிறந்த இலக்கியங்கள் கம்யூனிஸ்டுகளால் படைக்கப்பட்டிருக்கின்றன. போராட்டத்தில் உயர்ந்த முஷ்டிகளைப் பார்த்த மாசேதுங்குக்கு அவை நூறு பூக்களாகத் தென்படவில்லையா? கம்யூனிஸ்ட் பாசறையில் உருவான தஞ்சை ப்ரகாஷ் அடிக்கடி சொல்லும் வாக்கியம்: ‘நீங்கள் எல்லாம் வாழ்க்கை யைப் பார்க்க மட்டுமே செய்கிறீர்கள். வாழ்க்கையை உற்று நோக்கவேண்டும்.’
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT