

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினால் நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, 34 வயதிலேயே ஓய்வுபெற்ற இந்திய தொழில்நுட்ப வல்லுநரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியில் பிறந்தவர் இவர் (வயது34). இவரது தந்தை தொடக்கக் காலத்தில் ஒரு தொலைபேசி பூத்தில் வெறும் 1,500 ரூபாய் மாத ஊதியத்துக்கு சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வேறு ஒரு வேலைக்கு சேர்ந்த அவர் ரூ.4 ஆயிரம் சம்பாதித்துள்ளார்.
இதனால் தனது மகனை தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கவைக்க முடியவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாத இக்கட்டான சூழலிலும், அந்த இளைஞர் மனம் தளராமல் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். பின்னர், ஒரு சிறிய நகரில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் படித்த அந்த இளைஞர், தங்கப் பதக்கம் வென்றார்.