அனுபவத்தை காசாக்கும் ‘ஆன்லைன் கன்சல்டிங்’ | சம்பளம் பத்தலையா? - 10

அனுபவத்தை காசாக்கும் ‘ஆன்லைன் கன்சல்டிங்’ | சம்பளம் பத்தலையா? - 10
Updated on
2 min read

“கணக்கு எழுதுவது, ஜாப்​டைப்​பிங் போன்ற உடல் உழைப்பு வேலைகள் செய்து சில, பல ஆண்​டு​கள் ஆகின்​றன. நான் மேலா​ளர் அல்​லது பொறி​யாளர், அல்​லது வேறு ஏதோ தொழில்​முறை விற்​பன்​ன​ராக உள்​ளேன். என் திறமை​யும், அனுபவ​மும் வித்​தி​யாச​மானது, சிறப்​பானது. என் போன்​றவர்​களுக்கு கூடு​தல் வரு​மானம் பார்க்க வாய்ப்பு உண்​டா?” என்று சிலர் கேட்​கலாம்.

ஓர் நிறு​வனத்​தில் பல ஆண்​டு​களாக பணிபுரி​கிறீர்​கள். உங்​கள் துறை சார்ந்த அனுபவம் செழு​மை​யானது. அது ஏன் உங்​கள் நிறு​வனத்​துக்கு மட்​டும் பயன்பட வேண்​டும்? அந்த அனுபவத்தை உங்​களுக்​குக் கிடைக்​கும் ஒரு ஊதி​யத்​துக்கு மட்​டும் ஏன் பயன்​படுத்த வேண்​டும்? நிறு​வனம், அடுத்​தடுத்து பதவி உயர்​வும், கூடு​தல் பொறுப்​பும் கொடுத்​துக்​கொண்டு இருந்​தால் சரி. உங்​களால் வேறு எது​வும் செய்ய முடி​யாது. செய்​ய​வும் கூடாது. தவிர, செய்​யத் தேவை​யில்​லை. அதற்கு நேர​மும் இருக்​காது. 

வேண்​டிய பணமும், திருப்​தி​யும் அந்த ஒரு நிரந்தர வேலை​யிலேயே கிடைத்து விடும். அப்​படிப்​பட்ட நிலை​யில், நீங்​கள் உங்​கள் வேலை குறித்து மேலும் தெரிந்​து​கொள்ள, படிக்க உங்​களு​டைய நேரத்தை செலவு செய்​ய​லாம். அது​தான் சரி. ஆனால், அப்​படிப்​பட்ட அங்​கீ​கார​மும் வரு​மான​மும் கிடைக்​காதவர்​கள், தங்​கள் அனுபவத்​தை​யும் திறமை​யை​யும் வேறு வழிகளி​லும் காசாக்​கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in