அனைத்து சந்தை மூலதன முதலீட்டுக்கும் ஒரே திட்டம்
ஒரு பொதுவான இந்திய பங்கு முதலீட்டாளர் பெரும்பாலும் பரஸ்பர நிதி திட்டங்களின் போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பார். அங்கு திட்டங்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை எட்டும். அது ஏன்? அதிகப்படியான நிதி திட்ட தேர்வுகள் என ஒரு சாத்தியமான விளக்கம். மேலும் வெற்றியாளர்களைத் தொடர்ந்து துரத்தும் போக்கு மற்றொரு காரணம்.
ஒரு பங்கு நிதியைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலீட்டாளர்கள் பெரிய மூலதன நிதி (large cap fund), நடுத்தர மூலதன நிதி (mid cap fund), சிறிய மூலதன நிதி (small cap fund), மல்டி மூலதன நிதி, நெகிழ்வு மூலதன நிதிகள் மற்றும் பலவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த எண்ணற்ற தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, பல முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஒரே அணுகுமுறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க பல நிதிகளை வைத்திருக்கிறார்கள். கூடுதலாக, எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும், நிலவும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில், இந்த வகைகளில் சில, மற்றவற்றைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.
இது முதலீட்டாளர்களை தற்போது சிறப்பாகச் செயல்படும் பிரிவுகளில் நிலைநிறுத்தப்பட்ட நிதிகளைச் சேர்க்கத் தூண்டுகிறது. காலப்போக்கில், இந்த செயல்திறன் துரத்தல் ஒரு குழப்பமான மற்றும் திறமையற்ற போர்ட்ஃபோலியோவுக்கு வழிவகுக்கிறது.
