

இந்திய நிதித்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், வாடிக்கையாளர்களின் அலைச்சலைக் குறைக்கவும் மத்திய அரசுஅறிமுகப்படுத்திய CKYC (Central Know Your Customer) முறை, தற்போது வங்கி மற்றும் முதலீட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
முன்பெல்லாம் ஒரு நபர் புதிய வங்கி கணக்கு தொடங்கவோ அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ விரும்பினால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனித்தனியாக அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்தப் பெரும் சுமையைக் குறைப்பதே இந்த 'மத்திய வாடிக்கையாளர் விவரப் பதிவகத்தின்' முக்கிய நோக்கமாகும்.
என்ன இந்த சிகேஒய்சி?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் CERSAI (Central Registry of Securitisation Asset Reconstruction and Security Interest of India) அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு டிஜிட்டல் களஞ்சியமே இது. ஒருமுறை நீங்கள் ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் முறையாக KYC விவரங்களை அளித்துவிட்டால், அவை டிஜிட்டல் முறையில் இந்தப் பதிவகத்தில் சேமிக்கப்படும்.